என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அரிவாள் வெட்டு"
- சுதாரித்துக் கொண்ட அந்த ஆசாமிகள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
- ஐந்து பேரை இரண்டு மர்ம நபர்கள் வெட்டியது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை:
மதுரை அவனியாபுரத்தை அடுத்த பெருங்குடியில் நேற்று இரவு அதே பகுதியை சேர்ந்த கணபதி (வயது 28), விஜய் குட்டி (25), அஜித் (24) உட்பட இன்னும் சிலர் ஊருக்குள் உள்ள நாடகமேடை அருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இருவர் அஜித் என்பவரிடம் கண்ணா எங்கிருக்கிறார் என்று கேட்டுள்ளனர்.
அதற்கு அவர்கள் தங்களுக்கு தெரியாது என்று கூறியதையடுத்து வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது திடீரென்று அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அங்கிருந்தவர்களை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனால் பதட்டமடைந்த ஒரு சிலர் தப்பியோடினர். இதில் அஜித், விஜய் குட்டி, கணபதி ஆகியோர் அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்தனர்.
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி (48) என்னும் கூலித் தொழிலாளி உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட தனது பேரன் சார்வின் (6) என்பவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்வதற்காக அந்த வழியாக வந்து கொண்டிருந்தார்.
அந்த சமயம் அங்கு கூச்சல் சத்தம் கேட்டதால் நாடகமேடை அருகே சென்றார். அப்போது அந்த 2 பேரும் பெரியசாமி மற்றும் அவரது பேரனையும் அரிவாளால் வெட்டியுள்ளனர். சத்தம் கேட்டு அக்கம்பக் கத்தினர் திரண்டு ஓடி வந்தனர். இதனால் சுதாரித்துக் கொண்ட அந்த ஆசாமிகள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இந்த சம்பவம் குறித்து பெருங்குடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் திருமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தகுமார் மற்றும் இன்ஸ்பெக்டர் லதா உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற் கொண்டனர்.
அரிவாளால் வெட்டிய இருவரும் யார், அவர்கள் விசாரித்த கண்ணன் என்பவர் யார், ஜாதி பிரச்சினை காரணமா, அவர்களுக்குள் எதாவது முன்பகை உள்ளதா, இல்லை வந்தவர்கள் எதுவும் போதையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டார் ளா? என போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையில் ஊருக்குள் புகுந்து முன்பின் தெரியாத ஐந்து பேரை இரண்டு மர்ம நபர்கள் வெட்டியது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கட்டிட தொழிலாளி மீது வழக்கு
- மண்டைக்காடு அருகே பரபரப்பு
மணவாளக்குறிச்சி :
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே உள்ள பரப்பற்று மணக்காட்டுவிளையை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன். இவரது மகன்கள் சதீஸ்(வயது 31), வினேஷ் (28). கட்டிட தொழிலாளர்களான இவர்களுக்கிடையே பணத் தகராறு இருந்ததாக கூறப்படுகிறது.
நேற்று சதீஸ், தனது தம்பி வினேசை சந்தித்து தான் கொடுத்த கடன் தொகையை கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த வினேஷ் தகாத வார்த்தையால் திட்டி பைக் சாவியால் சதீஸின் வலது கழுத்து, பின்னந்தலை ஆகிய பகுதியில் குத்தி காயப்படுத்தினாராம்.
மேலும் அப்பகுதியில் நின்று பொதுமக்களுக்கு இடையூறாக வாக்குவா தத்திலும் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அந்தப் பகுதி யினர் மண்டைக்காடு போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் டைட்டஸ், சம்பவ இடம் விரைந்து சென்றார். அவர் வினேஸை கண்டித்து வீட்டுக்கு செல்லுமாறு கூறினார். இதனால் ஆத்திரமடைந்த வினேஸ், தான் மறைத்து வைத்திருந்த வெட்டுக்கத்தியால் சப்-இன்ஸ்பெக்டர் டைட்டஸை வெட்டினார்.
இதில்அவருக்கு இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. படுகாயமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் டைட்டஸ், குளச்சல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் குறித்து அவர் மண்டைக்காடு போலீசில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் அரசு பணி செய்யாவிடாமல் தடுத்தது, கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வினேஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையில் சதீசும் ஒரு புகார் கொடுத்துள்ளார்.இது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ராஜபாளையம் அருகே சொத்து பிரச்சினையில் விவசாயிக்கு சரமாரி அரிவாள் வெட்டு விழுந்தது.
- இதுகுறித்த புகாரின் பேரில் 4 பேர் மீதும், போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள நல்லமநாயக்கன்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் உமாகாந்த் (வயது40). இவரது பெரியப்பா சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது சொத்தை பிரிப்பதில் உமாகாந்த்துக்கும், உறவினர்களுக்கும் இடையே பிரச்சினை நீடித்து வந்தது.
சம்பவத்தன்று உமாகான் அதே ஊரில் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றி வந்தார். அப்போது அங்கு வந்த உறவினர்கள் சஞ்சய்குமார், ராஜ்குமார், தவ சத்தியபாமா, அச்சம்மாள் ஆகியோர் உமாகாந்த்திடம் சொத்து பிரச்சினை தொடர்பாக வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதில் ஆத்திரமடைந்த சஞ்சய்குமார் தான்கொண்டு வந்திருந்த அரிவாளை எடுத்து உமாகாந்த்தை சரமாரியாக வெட்டினார். ராஜ்குமார் இரும்பு கம்பியால் தாக்கியதாக தெரிகிறது.
இதற்கு தவசத்தியபாமா, அச்சம்மாள் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். தாக்குதலில் படுகாயமடைந்த உமாகாந்த் ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் லதா ஆகியோர் விசாரணை நடத்தி பெண்கள் உள்பட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- மர்ம நபர் தூங்கி கொண்டிருந்த விவசாயியை சராமரியாக அரிவாளால் வெட்டினார்.
- சிகிச்சை பெற்று வந்த விவசாயி உயிரிழந்ததால் கொலை வழக்காக பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள எல். வலையபட்டியை சேர்ந்தவர் சின்னையா (வயது45). விவசாயி. இவர் கடந்த சனிக்கிழமை இரவு தனது வீட்டிற்கு வெளியில் தூங்கி கொண்டிருந்தார்.
அப்போது திடீரென வந்த மர்ம நபர் தூங்கி கொண்டிருந்த சின்னை யாவை சராமரியாக அரிவாளால் வெட்டினார். இதில் அவருக்கு குடல் சரிந்து கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் நத்தம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்க பட்ட அவர் மேல் சிகிச்சை க்காக மதுரை அரசுமருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் தொடர் சிகிச்சை பெற்று வந்த சின்னையா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து நத்தம் போலீசார் அரிவாளால் வெட்டிய மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்ற னர். இச்சம்பவம் அப்பகுதி யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- முன்விரோதத்தில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபர் வெங்க டேச பெருமாளை கைது செய்தனர்.
மதுரை
மதுரை சிம்மக்கல் அபிமன்யூ தெருவைச் சேர்ந்தவர் வேல்முருகன் (42). சிம்மக்கல் எம்.சி.தெருவை சேர்ந்தவர் மகா லிங்கம் மகன் வெங்கடேச பெருமாள் (21). இவர் 10 நாட்களுக்குமுன்பு சிகரெட்பற்றவைக்க வேல்முருகனிடம் தீப்பெட்டி கேட்டுள்ளார். அதற்கு தீப்பெட்டி கேட்க வயது வித்தியாசம் வேண்டாமா? வயதில் மூத்தவனான என்னிடமா கேட்கிறாய்? என்று வெங்கடேச பெருமாளை கண்டித்துள்ளார். அதில் தகராறு ஏற்பட்டு வேல்முருகனை வெங்கடேசபெருமாள் பிடித்து கீழே தள்ளியுள்ளார்.
இந்த சம்பவத்தைப் பார்த்த அவர் மகன் அருண்குமார் ஓடிவந்து வெங்கடேச பெருமாளை கண்டித்து உள்ளார். இந்த முன்வி ரோதத்தில் செல்லூர் பாலம் ஸ்டேசன் ரோடு அருகே பெட்ரோல் பங்க் அருகே சென்ற அருண்கு மாரை வழிமறித்து ஆபாசமாக பேசிய வெங்கடேச பெருமாள் அவரை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில படுகாய மடைந்த அருண்குமாரை மதுரை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்த சம்பவம் குறித்து அருண்குமாரின் தந்தை வேல்முருகன் செல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபர் வெங்க டேச பெருமாளை கைது செய்தனர்.
- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த பகுதியில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர்.
- அப்போது அங்கு வந்த அண்ணன் தம்பிகளான நவீன் (22), ரூபன் (24) ஆகியோருக்கும், தினேஷ், சுக்ரு ஆகியோருக்கும் இடையே பட்டாசு வெடிப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டது.
சேலம்:
சேலம் மணியனூர் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர்கள் தினேஷ் (வயது 30), சுக்ரு (28).
அரிவாள் வெட்டு
இவர்கள் இருவரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த பகுதியில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த அண்ணன் தம்பிகளான நவீன் (22), ரூபன் (24) ஆகியோருக்கும், தினேஷ், சுக்ரு ஆகியோருக்கும் இடையே பட்டாசு வெடிப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் நவீன், ரூபன் ஆகியோர் சேர்ந்து அவர்கள் இருவரையும் அரிவாளால் வெட்டினர். காயம் அடைந்த 2 பேரும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
விசாரணை
இது குறித்த புகாரின்பேரில் நவீன், ரூபன் ஆகிய இருவரையும் அன்னதா னப்பட்டி போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு மிரட்டியதாகவும் தெரிகிறது.
- போலீஸ் ஏட்டுவுக்கு சரமாரி அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாயல்குடி:
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள உறைக்கிணறு கிராமத்தை சேர்ந்தவர் ஜேசுராஜா (வயது45). பனைத்தொழிலாளியான இவர் சம்பவத்தன்று தனது உறவினர் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சாயல்குடி போலீசில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தியதில் ஜேசுராஜா பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இன்று காலை சப்-இன்ஸ்பெக்டர் சல்மோன் தலைமையில் ஏட்டு காளிமுத்து(35) மற்றும் போலீசார் ஜேசுராஜாவை கைது செய்ய அவரது வீட்டுக்கு சென்றனர். அப்போது கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு மிரட்டியதாகவும் தெரிகிறது.
இதில் தகராறு முற்றவே, வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்த ஜேசுராஜா போலீசாரை வெட்ட முற்பட்டார். இதனை ஏட்டு காளிமுத்து தடுக்க முயன்றார். அப்போது அவருக்கு கால் பகுதியில் சரமாரி வெட்டு விழுந்தது. உடனே சுதாரித்துக் காொண்ட போலீசார் சுற்றி வளைத்து ஜேசுராஜாவை பிடித்து கைது செய்தனர்.
அரிவாள்வெட்டில் காயமடைந்த ஏட்டு காளிமுத்து அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். போலீஸ் ஏட்டுவுக்கு சரமாரி அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- ராஜேஷ் பொட்டிரெட்டிப்பட்டி வார சந்தை அருகே சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் இவரை கை மற்றும் வாய்ப்பகுதியில் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடி விட்டனர்.
- சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளார். மேலும் இதுகுறித்து எருமப்பட்டி போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எருமப்பட்டி:
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள பொட்டிரெட்டிப்பட்டி ஊராட்சி இந்திரா காலனியை சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய மகன் ராஜேஷ்(24). இவர் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார்.
சம்பவத்தன்று இவர் பொட்டிரெட்டிப்பட்டி வார சந்தை அருகே சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் இவரை கை மற்றும் வாய்ப்பகுதியில் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடி விட்டனர்.
இதைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் ராஜேஷை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளார். மேலும் இதுகுறித்து எருமப்பட்டி போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சித்தனூர் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் விக்னேஷ் (20) எலக்ட்ரிசன் வேலை செய்து வருகிறார்.
- தளவாய்பட்டி பஞ்சாயத்து பழனியாண்டவர் கோவில் அருகே உள்ள மணி (35) என்பவருக்கும் கடந்த மாதம் 22-ந் தேதி சீரியல் செட்டு போடுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டது.
சேலம்:
சேலம் மல்லமூப்பம் பட்டி அருகே உள்ள சித்தனூர் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் விக்னேஷ் (20) எலக்ட்ரிசன் வேலை செய்து வருகிறார். இவருக்கும் தளவாய்பட்டி பஞ்சாயத்து பழனியாண்டவர் கோவில் அருகே உள்ள மணி (35) என்பவருக்கும் கடந்த மாதம் 22-ந் தேதி சீரியல் செட்டு போடுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு மல்லமூப்பம்பட்டி பகுதியில் உள்ள சிக்கன் கடை அருகே விக்னேஷ் நின்றிருந்தார். இதை பார்த்த மணி சிக்கன் வெட்டும் அரிவாளால் விக்னேஷை இடது காதுக்கு மேற்புறம் தலையில் வெட்டினார். இதில் நிலைகுலைந்த விக்னேஷ் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார்.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மோட்டார் சைக்கிளில் வந்த இருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
- இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
திருமங்கலம் அருகே உள்ள மொச்சிகுளம் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் காந்தி(வயது44). இவரது உறவினர் சூரியா(33). கடந்த 2002-ம் ஆண்டு அந்த பகுதியில் கோவில் திருவிழாவின்போது இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான வழக்கில் ஆஜராவதற்காக மதுரைக்கு பாரபத்தி நான்கு வழிச்சாலையில் வந்து கொண்டிருந்தனர்.
அங்குள்ள கியாஸ் கம்பெனி அருகே பின்னால் வேகமாக வந்த ஒரு கார், மோட்டார் சைக்கிளை முந்தி அவர்களை வழிமறித்து நின்றது. அதில் இருந்து ஆயுதங்களுடன் இறங்கிய 5 பேர் கும்பல் அவர்கள் இருவரையும் சரமாரியாக வெட்டி விட்டு கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி சென்றது.
இதில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த கூடக்கோவில் போலீசார் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வாலி பர்களை மீட்டு ஆஸ்பத்தி ரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் கோவில் திருவிழாவில் நடந்த மோதலில் ஏற்பட்ட முன்விரோதத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிய வருகிறது.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சகோதரிக்கு நியாயம் கேட்டு தந்தையுடன் வந்த பெண்ணுக்கு நேர்ந்த அவலம்
- மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
கோவை,
கோவை மாவட்டம் சிறுமுகை அடுத்துள்ள சின்னகள்ளிப்பட்டி அருகே கடுவாய்க்கரையை சேர்ந்தவர் கனகராஜ்(வயது44). இவருக்கு திருணம் ஆகி விட்டது.
இந்த நிலையில் கனகராஜூக்கு அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.2 பேரும் அடிக்கடி சந்தித்து, தங்கள் காதலை வளர்த்தும், ஜாலியாகவும் இருந்து வந்தனர்.
இந்த கள்ளக்காதல் விவகாரம் கனகராஜின் மனைவிக்கு தெரியவரவே அவர் கணவரை கண்டித்து ள்ளார்.
ஆனாலும் அவர் அதனை கண்டு கொள்ளாமல், தனது கள்ளக்காதலை தொடர்ந்தார். இதையடுத்து கனகராஜின் மனைவி தனது தந்தை வீட்டுக்கு சென்று நடந்ததை சம்பவத்தை தெரிவித்தார்.
இதையடுத்து கனகராஜின் மாமனார், தனது இளைய மகளுடன் அங்கு சென்று, ஏன் இப்படி செய்கிறாய் என கேட்டார். அதற்கு நான் அப்படி தான் செய்வேன் என கூறிய கனகராஜ் அவரை தாக்க முயன்றார்.
இதனை அவருடன் வந்த இளையமகள் பார்த்து தடுக்க முற்பட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர், வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து, அவரை வெட்டினார்.
இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- இரு தரப்பினர் மோதல்; 9 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
- கீழத்தூவல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
பசும்பொன்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை அடுத்துள்ளது கீழக்குளம் கிராமம். இங்குள்ள மந்திரமூர்த்தி அய்யனார் கோவிலில் கடந்த வாரம் புரவிடுப்பு விழா தொடங்கி யது. இந்த திருவிழா தொடர்பாக கீழக்கு ளத்தைச் சேர்ந்தவரும் கே.ஆர். பட்டணம் ஊராட்சியின் துணைத் தலைவருமான பெரியசாமி தரப்பிற்கும், முதுகுளத்தூர் திமுக ஒன்றிய செயலா ளரான சண்முகம் தரப்பிற்கும் முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.
கோவில் திருவிழா முடிந்து அன்னதானம் நடந்த போது இருதரப்பி னரிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது அரிவாள், கத்தி, கம்பு, கிரிக்கெட் மட்டை ஆகிய வற்றால் தாக்கியும், கற்களை வீசி எறிந்தும் இருதரப்பி னரும் கடுமை யாக மோதி கொண்டனர்.
இதில் கீழக்குளத்தை சேர்ந்த சந்திரசேகர் (வயது42), சண்முகவேலு(67), பெருங்கருணையைச் சேர்ந்த சண்முகம்(47), கீழக்குளம் முருகன்(46) முத்துராமலிங்கம் மனைவி கஸ்தூரி(50), மகாலிங்கம் மகன் உதயகுமார்(19), முத்துக்குமார்(30), மாரி முத்து (43), ஜெகதீஸ்வரன்(33) ஆகியோருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இவர்கள் மதுரை, ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இந்த மோதலின் போது பாது காப்பு பணியில் ஈடுபட்ட அபிராமத்தை சேர்ந்த காவலர் சரவணன் காயம் அடைந்தார். இவர் கமுதி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த மோதல் குறித்து கீழத்தூவல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்